| எத்தனை கடவுளிடம் |
| எனக்காக வேண்டியிருப்பாய்! |
| எத்தனை மணித்துளிகள் |
| எனக்காக காத்திருந்தாய்! |
| எத்தனை இரவுகள் |
| என் வரவுக்காக விழித்திருந்தாய்! |
| எத்தனை ஆண்டுகள் |
| இரவில் விழிக்காமல் நானிருக்க |
| விழித்து கொண்டு நீ இருந்தாய்! |
| கருவறையில் இருக்கும் |
| கல்லைவிட,கள்ளகபடமில்லாத, |
| கருவறையில் சுமந்தவளே, |
| கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்! |
| என் வலிக்காக நான் அழுதேன். |
| வளர்த்தவளுக்காக நான் அழுததில்லை... |
| காரணம் தெரியாமல் என்னோடு நீ அழுதாய்! |
| இதயத்தை உதைத்தவளுக்காக |
| வலியால் நான் அழுதேன்... |
| காரணம் ஏதும் கேட்காமல் அப்போதும் |
| என்னுடன் நீ அழுதாய்! |
| அன்பு ஒன்றே உலகில் |
| சிறந்தது என்பதை தெரியவைத்தாய்! |
| அன்புதான் அழுகையாக |
| வெளிப்படுகின்றது என்பதை புரியவைத்தாய்! |
| அன்பே அன்னை!அன்புதான் உலகம் |
| என்பதை உணர்த்தினாய்! |
| கருவறையில் இருந்தபோது |
| கரு என்று பாராமல், |
| உன் உயிரை பற்றி நினைக்காமல் |
| கருவிற்கு ஓர் உயிர் கொடுத்தாய்! |
| மழலையாக தவழ்ந்தபோது |
| இரத்தம் என பாராமல், |
| என் கண்ணீரை துடைக்க |
| இரத்தத்தை பாலாக மாற்றி, |
| எனை மகிழச்செயதாய்! |
| மனிதனாக வளர்ந்தபோது |
| சோகம் தெரியாமல் நான் வாழ, |
| சுகமாக நான் இருக்க, |
| நலமுடன் நான் வாழ, |
| எனக்காக என்று நான் இருந்தபோது |
| தனக்காக என்று நீ இல்லாமல், |
| இரத்தத்தை உருக்கி |
| வியர்வை சிந்தினாய்! |
| அன்றும் எனக்காக |
| கண்ணீர் வடித்தாய்! |
| இன்றும் எனக்காக |
| கண்ணீர் வடிக்கின்றாய்! |
| இதுவரை செய்த தவறுகளுக்காக |
| தலை வணங்குகின்றேன்! |
| வாழ்க்கையை தொலைக்க |
| நான் விரும்பவில்லை... |
| இதோ!கடவுளாக |
| உனை வணங்குகின்றேன்! |
| கடல் தாண்டி |
| பயணம் செய்ய விருப்பமில்லை. |
| நீயே!எந்தன் |
| அசையா சொத்தாக இருக்கும்போது! |
| காற்றை |
| சுவாசிக்க விருப்பமில்லை... |
| நீயே!எந்தன் |
| மூச்சாக இருக்கும்போது! |
| ஒலியினை கூட |
| கேட்க விருப்பமில்லை.... |
| நீயே!எந்தன் |
| செவியாக இருக்கும்போது! |
| அத்தனையும், |
| இத்தனையும், |
| இத்தனை நாட்கள் |
| நான் இழந்ததுபோதும்... |
| இனி,அன்பை மட்டும் என்றும் |
| நான் இழக்க விரும்பவில்லை... |
| தாயே!உனையே! |
| என் இதயத்தில் நேசிக்கிறேன்! |
| உன்னை மட்டுமே |
| உயிரின் மூச்சாக சுவாசிக்கிறேன்! |
| இனி,எனக்கு |
| ஒரு பிறப்பு என்றால், |
| அது உன் கருவறையாக |
| மட்டும்தான் இருக்க வேண்டும். |
| எனக்கு இறப்பு என்றால், |
| அதுவும் உன் மடியாக |
| மட்டுதான் இருக்க வேண்டும்.... |
| இனி,உனக்கு |
| ஒரு பிறப்பு என்றால், |
| எனக்கு மகளாக |
| மட்டும்தான் நீ பிறக்க வேண்டும்... |
| மகளாக பிறந்து, |
| தாயாக இருந்து, |
| எனை நீ |
| வளர்க்க வேண்டும்..... |
| கடவுள் |
| என்பவன் |
| ஒருவன் இருந்தால், |
| இதனையேற்று |
| எனக்காக |
| செவி சாய்க்க வேண்டும்.... |
| அன்பே கடவுள்! |
| அன்பை தரும் |
| அன்னை மட்டுமே கடவுள்! |
| தாயே!நீ வாழ்க! |
| அன்பிற்கு உயிர் கொடுத்தவளே!!! |
| பல்லாயிரகணக்காண்டுகள் நீ வாழ்க! |
Tuesday, August 21, 2012
Subscribe to:
Comments (Atom)