| கண்ணில் காண்பதெல்லாம் நனவென்று நம்பாதே... |
| காணாத கனவுகளும் நனவாகிப் போகலாம்... |
| நிகழ்கால நிழலில் மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே... |
| எதிர்கால மர நிழலில், இறந்த காலத் தென்றல் காற்றின் இதமான அரவணைப்பில் சுகமாக ஓய்வெடு... |
| கண்களை மூடித் திறக்குமுன், உன் கற்பனையைத் திறந்துவிடு.. |
| பூக்களின் வாசனையை நுகர்வது தவறல்ல...அதிலுள்ள முட்களின் வேதனையையும் புரிந்துகொள்.. |
| புன்னகையே வாழ்க்கையல்ல..பூகம்பமும் வரும்; புரிந்துகொள்... |
| நீ விதைத்ததை நீயே அறுவடை செய்வாய்; |
| அன்று கொள்ளாவிடினும் நின்றாவது கொள்ளும்.. |
| மாற்றான் துயரம் மற்றுமல்ல; மதுவும்; ஏன் மாதுவும் கூட... |
| மற்றவன் கண்களில் தெரிவது கண்ணீரென்று மட்டும் எண்ணாதே, |
| அது விஷமாகவோ; கேலியாகவோ; ஏன் உனக்கெனவே செய்த புதை குளியாகவும் இருக்கலாம்.... |
| இது "நீ".. |
| உனக்கென ஒரு பாதை.. |
| உனக்கென ஒரு பயணம்.. |
| உன்னோடு சில பயணிகள்.. |
| தேர்வு உன் கையில்... |
| இது நீ "பிறந்த நாள்" அல்ல.. |
| உன்னை நன்கு ஒரு முறை "உணர்ந்த நாள்" ஆயின்... |
| உன்னை எண்ணிப் பூரிப்பாதில் நானும் ஒருவன் |
| பல்லாண்டு காலம் வாழ்க... |
| பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. |
Tuesday, September 4, 2012
Subscribe to:
Comments (Atom)
