| உன் இதழ் சொட்டும் தேனை |
| பருகி ஊன் வளர்த்து உயிர் |
| வாழ்வேன் உயிர்முச்சு நிற்கும்வரை |
| நீ வெளிவிடும் மூச்சுக்காற்றும் |
| என் சுவாசகாற்றானது நீ சுவாசித்ததால்... |
| அனைத்து பிராணங்களும் தவமிருக்கும் |
| உன் மூச்சு காற்றை சுவாசிக்க |
| நீ எடுத்து வைக்கும் ஒரு அடிக்கு அந்த |
| அமைதியே அடிமையாகிவிடும் |
| இந்த உலகமே இருண்டுவிடும் |
| அன்பே !உன் இமை மூடும் நேரத்தில் |
| தேவர் கூட்டம் தரையிறங்கியது |
| தவபுதல்வியை தவறவிட்டோம் என்று |
| கார் மேகம் எல்லாம் ஒன்றானது |
| அன்பே !உன் அடர் கருகூந்தலை காண |
| உன் சுட்டும் விழி பார்வையால் |
| அந்த சுடர்வனே சுருங்கிவிடுவான் |
| வான் நிலா வடம் பிடித்திறங்கியது |
| அன்பே !உன் அழகு நெற்றியில் குடியிருக்க |
| வான்மீன்கள் அனைத்தும் உன் |
| வாய்க்குள் வந்துவிட்டது |
| பக்கத்திற்கு பதினாறு பற்களாக |
| அனைத்து மலர்களும் ஆடையானது |
| அழகி! நீ அணிவாய் என்று |
| வானவில்லின் ஏழு நிறங்களும் |
| வளவியாகிவிட்டது |
| அன்பே !உன் கரம் சேர |
| தவப்புதல்வன் நானும் |
| தவித்து தவமிருக்கிறேன் |
| தங்கமகள் ( நிமிஷா )உன் இதயம் |
| எனும் கோட்டைக்குள் குடியிருக்க !!!!!!! |
Monday, September 10, 2012
Subscribe to:
Comments (Atom)
