| விவசாயம் |
| எங்கே விவசாயம் ? |
| விவாசாயம் விழுந்துவிடும் அபாயம் |
| கணினி மீது இருக்கும் கவனம் |
| காணி நிலத்தின் மீதும் தினமும் வரணும் |
| வயல்வெளிகள் எல்லாமே வீடுகள் |
| கட்டிவிட்டால் |
| வாய்க்கரிசிக்காக கூட கையேந்தும் நிலைமை வரும் |
| அரிசி விலை அதிகம் என என்னும் நெஞ்சம் |
| தங்கம் விலையை அரிசிவிலை மிஞ்சும் |
| சேற்றில் கைவைக்க ஆல் இல்லை இங்கே |
| நாளை சோற்றில் கைவைக்க |
| வயல்வரப்புகள் எங்கே |
| உனக்கு இன்று உண்டு உணவு |
| நாளை உணவு வெறும் பகல் கனவு |
| கணினி கண்ட அறிவு |
| விவசாயத்தை பேணிக்காக்க அளின்றி |
| ஏற்பட்ட சரிவு |
| கணினி ஆளும் உலகம் |
| வேண்டாம் அந்த நரகம் |
| காணி நிலத்தை நாளை இந்த உலகம் தேடுமே |
| பசி என்னும் நோயால் நாளை உலகம் வாடுமே |
| உயிரின் விலையறியா மனிதா |
| உன் உயிரை விட கணினி என்ன பெரிதா |
| கால்வயிற்று கஞ்சிக்காக கையேந்தும் துயரம் |
| நாளை தலைமுறை வரை தொடரும் இந்த |
| அவலம் |
| என் தோழா |
| இன்றே கவலை கொள்ளடா |
Thursday, August 30, 2012
விவசாயம்
Subscribe to:
Comments (Atom)
