Wednesday, September 5, 2012



காதலை மறுக்கும் காதலியாய் நீ..
அதையும் ரசிக்கும் காதலனாய் நான்..

குறைந்த நபர்களே கொண்ட
பேருந்து பயணம் ..
முன் இருக்கையில் நீ..
பின் இருக்கையில் நான்..

இருக்கையின் கம்பிக்கு இடையில்
முழு முகத்தையும் மறைத்துக்கொண்டு
கண்களை மட்டும் காட்டி பேசும்
உந்தன் அழகில் ஒரு சதவிதமாவது
வருமா .?மேகத்தில் மறைந்து நிற்கும்
நிலா..!!!!

நீ... நடந்து வருகையில் ,நிச்சயம்
தோற்றுத்தான் போகும் துள்ளி
குதித்து வரும் மான் குட்டியின்
அழகு...!!!!

மழையில் நனைய பிடிக்கும் என்று சொன்னாய்

மழையில் நனைய நீ ஆசைபடுவதைவிட
உன்மேல் விழ அவைகள் அசைபடுவதே
அதிகம்..!!!

ஒவ்வொரு மழைத்துளியும் உன்மேல் விழ
அவை அனைத்தும் தெரிகிறது
எனக்கு " துண்டு பிரசுரமாகவே "
அதில் பொறிக்கப்பட்ட வாசகமாய்
என்னை காதலிப்பாய...? இப்படிக்கு
மழை...!!!

சலைக்காமல்,மலைக்காமல் அலைபாயும்
கடல் அலைக்கு போட்டியென காற்றிலே
அசைந்தாடும் கூந்தலை பிடித்து
காதுக்கு பின்னே புதைத்துகொள்ளும்
உந்தன் அழகை ரசிக்க இந்த
ஒரு யுகம் போதாதுதான்.!!!

அன்றொரு நாள்..! அழகிய மாலைபொழுது
காலை முதல் உனக்காக ஒழித்து
வைத்திருந்த தென்றலை வீசிக்கொண்டிருந்தது
காற்று..!!!

அந்த நொடிக்கணம் சட்டென
எதிர்பாராமல் என் முகத்தை
உன் துப்பட்ட தழுவி செல்ல
அடடா...!!!!

ஒற்றை நொடியில் ஓராயிரம் வார்த்தைகள்
பேசிவிட்டு சென்றது என்னிடம்..!!

துப்பட்டாவை கண்டு பிடித்தவனுக்கு
நிச்சையம் கவிஞர்கள்- வாழ்த்துக்கள்
உண்டு எப்போதும்..!!!

கழுத்தில் தவழும் தங்க சங்கிலியை
எடுத்து,,செவ்விதழ்களால் கவ்வி
முத்து பற்களால் மெல்ல நீ கடிக்க
சட்டென உயிர்த்தெழும் சங்கிலி
இன்பமாய் உன் இதழ்களை
சுவைத்து மகிழ்வதை
நான் அறிவேன்..!!!!
ம்ம்.. கொடுத்துவைத்த சங்கிலி

ஒற்றை தலைவலிக்காக எப்போதாவது
நீ அணிந்து கொள்ளும் உன்
மூக்கு கண்ணாடி..!!

அந்த நொடி கணங்களில் அந்த
கண்ணாடி உன் கண்களை பார்த்து
இத்துனை நாள் உன்னை காணாமல்
நொறுங்காமல்.. நொறுங்கி போனேனே,,
என பேசிக்கொள்ள கூடுமோ..!!!

உன் இதழ் விரியும் எருக்கம் பூ
வெடிக்கும் சிரிப்பு..,
அமைதியான ஆற்றில் தங்க
சங்கிலி கட்டிவிட்டது போலல்லவா
தோணுதடி எனக்கு..!!!

நம் பல்கலைகழகத்து முற்றத்து
பிள்ளையாருக்கு தினசரி தவறாமல்
கிடைத்து விடுமே உந்தன் தரிசனம்
அதை எனக்கும் கிடைக்கபெற
செய்வாயோ..!!!

தோழியாய் அறிமுகம் ஆனவள் நீ
முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது
எனக்கு காதல் நோய்..
இருந்தும் சொல்லமுடியாமல் போன
பல தருணங்கள்..!!!!

எதிர்பாராமல்,எதார்த்தமாய்
என்னை அறியாமல் நான் செய்த
சில செயல்களால் அறிந்து
கொண்டாயோ என்னவோ..?

எப்போதும் இயல்பாய் பேசும் நீ..
என் காதல் தெரிந்ததில் இருந்து
கதிரவனை கண்டது அதன்
திசையிலேயே செல்லும் சூரியகாந்தி
மலருக்கு எதிர் மறையானதோ..?

என் முகம் கண்டதும் எதிர்
திசையில் திரும்பி கொள்கிறதே
இப்போதெல்லாம் உந்தன் முகம்..

உன்னை பார்க்கும் போதெல்லாம்
பசியைக் கூட சொல்ல தெரியாமல்
கதறி அழும் பச்சிளம் பிள்ளை போல்
மாறுகிறேன் என் காதலை
சொல்ல தெரியாமல்..!!!

இப்படி உன்னை அடிமுதல் நுனிவரை
அணு அணுவாய் ரசிக்கும் எனக்கு
கிடைக்கும் பரிசுகளோ சோகம்
மட்டுமே தொடர்ச்சியாய்..!!

என் காதல் உனக்கு தெரிந்துவிட்டது
என்ற ஒற்றை சந்தோஷம் மட்டுமே
என்னிடம்..!!

சோக சுரங்கள் கேட்கும்போதெல்லாம்
அறுபடுகிறது எந்தன் இதயம்
அறுபட்ட இதயம் என்றாலும்
உன் நினைவுகள் மட்டும் அப்படியே
பத்திரமாய்..!!!

உனக்கு கொடுப்பதற்காக
மனமுறுகி நான் எழுதும் கவிதைகளை
வழக்கம்போல் வைத்துக்கொள்கிறேன் நானே..!
கசக்கியபடி...!!!!!

ரசிக்க தெரிந்தவனுக்கு காதல்
தோல்வியும் அழகுதான்..!!! 

No comments:

Post a Comment