Wednesday, September 5, 2012


பெண்ணே நீ தூரத்தில் இருந்தாலும்,
என்னைத் தொட்டுச் செல்லும்
தென்றலாக இருக்கின்றாய்!

என் ஆசைகளுக்கு அணை கட்டுகிறேன்.....
உன் சிரிப்பொலியில் சுக்குநூறாக உடைக்கின்றாய்.....!

என் உதடுகள் உன்னிடம் பேசுதடி.....
என் உள்ளம் ஏனோ நடுங்குதடி......
உள்காச்சலும் அடிக்குதடி......!

சிரிக்காதே பெண்ணே.....
என் சிறுமூளையும் சிதருதடி.......
என் சின்ன இதயத்துக்கும் சிறகுகள் முளைக்குதடி..

தென்றலாய் வரும் பெண்ணே....
உன்னை உணர்ந்திருக்கின்றேன்,
உன்னை நுகர்ந்ததில்லையடி........!

இதழ் பூக்கும் பெண்ணே.......
உன்னில் என் இதழ் குவியுதடி.....
இம்சைகள் ஆகுதடி........

புன்னகைப் பெண்ணே........
உன் வெட்கச் சிரிப்பில்,
என் புலன்களில் அலையடிக்குதடி......

மொத்தத்தில் பெண்ணே.......
உன் பிரியமான சிரிப்பால்,
நான் உன் பித்தன் ஆனேனடி..............!!!!!!!

No comments:

Post a Comment