| வர்ணித்தவன் |
| எல்லாம் பெண்கள் உடம்பில் |
| உள்ள வேதங்களை படிக்கிறான் |
| இடம் பொருள் ஏவலை மறந்து |
| இவளும் கிடக்கிறாள் |
| பெண்ணின் கற்பின் |
| அருமையை மறந்து ...! |
| கண்ட |
| இடங்களிலும் முத்தக் |
| கண்காட்சி காணப்படுகிறது |
| அமெரிக்காவை போல...! |
| ஒரு சந்திப்பில் |
| கைப்பிடித்தவன் |
| ஓர் இரவு கணவன் ஆகிறான் ...! |
| காணும் இடமெல்லாம் |
| கல்லூரி தோட்டம் |
| பூக்கும் மணமெல்லாம் |
| காதலர்கள் கூட்டம் |
| அவர்களுக்குள் நடக்கிறதே |
| இளமை ஆட்டம் |
| அதனுள் தீர்த்துக் கொண்டார்கள் |
| இளமைப் பசியை... |
| பேருந்தில் |
| புயலாக உரசல் நடக்கிறது |
| பூங்காக்களில் |
| மழையாகவே பொழிகிறது |
| முத்தங்கள் ...! |
| துப்பட்டாவால் |
| தன் முகத்தை மறைத்தவள் |
| மார்பகத்தை துப்பட்டாவால் |
| மறைக்க மறந்தாள் |
| ரசித்துக் கொண்டார்கள் |
| அவளை ஏற்றிச் சென்ற |
| காதலனைத் தவிர |
| அனைவரும் ...! |
| அன்று |
| காதல் பூத்ததே |
| திருமணத்துக்காகத்தான் |
| இன்று |
| பெரும்பாலும் காதல் பூப்பதே |
| கற்பை கறையாக்கத்தான்...! |
| உரசிவிட்டு |
| உடம்புக்காக உறங்கிவிட்டு |
| போகும் காதலைத்தான் |
| பார்க்க முடிகிறது |
| உடம்பை |
| எதிர்பார்க்காத |
| உயிர்கொண்ட காதலை |
| பார்க்க முடிவதில்லையே ...! |
Saturday, September 22, 2012
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)
No comments:
Post a Comment