| என் தோழியே |
| உனக்காக சில வரிகள் |
| இதில் மறைந்திருக்கும் |
| என் கண்ணீர் துளிகள் |
| அவள், பெயர் ” ?” |
| இந்த கதையின் நாயகி |
| என் முதல் தோழி |
| தமிழ் பெண் |
| பாரதி பாடிய புதுமைப்பெண் |
| நியாபகம் உள்ளதா ! |
| என் பெயர்ச் சொல்லி |
| உன் அறிமுகம் |
| முதன் முறை பார்த்தேன் |
| ?யின் முகம் |
| நம் நட்பின் |
| தொடக்கம் அறியேன் |
| முடிவை மறவேன், உன்னால் |
| நட்பென்னும் மழை |
| நம் மீது பொழிந்தது |
| அதில் நனைந்து |
| ஒரு வருடம் கழிந்தது |
| தொடங்கியது கல்லூரியின் |
| இரண்டாம் ஆண்டு அன்று |
| எங்கள் நட்பின் |
| இறுதி நாள் என்று |
| காணச் சென்றேன் |
| பேச்சில் ஒரு மாற்றம் |
| புன்னகையில் போலித் தோற்றம் |
| என்னை, பார்க்க |
| பார்வை இல்லை அவளிடம் |
| முதல் தோழியின் நட்பு |
| முடிந்து போனது |
| முகவரி இன்றி |
| தொலைந்து போனது |
| கண்ணீர் நிரம்பி |
| என் கண்கள் |
| மறைக்க முயலும் |
| என் கைகள் |
| ஊர் பழித்ததென |
| உறவை அறுத்தாய் |
| ஏன் என்றதற்கு |
| பதில்கூற மறுத்தாய் |
| நான் கொல்லப்பட்டதின் |
| வலி உணர்ந்தேன் |
| உன்னை வார்த்தையால் |
| கொல்லத் துணீந்தேன் |
| என்னிடம் சொல்லாமல் சென்றாய், |
| அது நீ செய்த ஒரே தவறு |
| தீஞ்சொல்லால் கொன்றேன் உன்னை |
| அது நான் செய்த பெருந்தவறு |
| காலந்தாழ்ந்து என் |
| தவறை உணர்ந்தேன் |
| உன்னிடம் மன்னிப்புகோரும் |
| அருகதை இழந்தேன் |
| இன்று, |
| உன் குரல் மட்டுமல்ல |
| வள்ளுவன் குறளும் புரிந்தது |
| தீயினால் சுட்ட புண் உள் ஆறும்; |
| ஆறாதே நாவினால் சுட்ட வடு |
| மன்னிப்பாயா என்னை.. |
Wednesday, September 26, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment